சினிமா செய்திகள்
விஜய் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்?
விஜய்யின் ‘லியோ’ படத்தைப் போலவே சிவகார்த்திகேயனும் அடுத்தப் படத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் படக்குழுவினர் எப்படி கஷ்டப்பட்டு படப்பிடிப்பை முடித்துள்ளனர் என்று மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட, அது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும், நேற்று முன் தினம் சென்னைக்கு படக்குழு திரும்பியுள்ளது.
விஜய்யின் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் போலவே, நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய 21வது படத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தக் கதையில் ஒரு இராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. இதற்காக, லொகேஷன் தேடும் பணியில் இயக்குநர் தீவிரமாக இருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. ‘மாவீரன்’ படத்தை முடித்துக் கொடுத்தப் பின்பு இந்தப் படத்திற்கு செல்ல இருக்கிறார் சிவகார்த்திகேயன். விரைவில் படம் தொடங்குவது குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.