Connect with us

உலகம்

லாக்கரில் வைத்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்ற வங்கி நிர்வாகம்.. என்ன நடந்தது?

Published

on

லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை செய்து கொடுத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஜேபி மோர்கன் வங்கியில் தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அரிய வகை நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜேபி மோர்கன் வங்கி தங்களுக்கு லாக்கர் பெட்டிகளுக்கான பில்களை தவறான முகவரிக்கு அனுப்பியதாகவும் அந்த பில்கள் தங்களுக்கு கிடைக்காததால் ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம் தங்களது லாக்காரில் இருந்த நகைகளை விற்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#image_title

இந்த தம்பதியினருக்கு மான்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும், லூசியானா என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும் சொந்தமாக உள்ளது. மன்ஹோட்டன் குடியிருப்பில் இந்த தம்பதி தங்கி இருக்கும் நிலையில் வங்கி நிர்வாகம் லூசியானா முகவரிக்கு பில்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வங்கியில் இருந்து எந்த விதமான பில்களும் கிடைக்காததால் இந்த தம்பதியினர் லாக்கருக்கான பில் செலுத்தவில்லை என்றும் இதனை அடுத்து எச்சரிக்கை கடிதமாக பில்களை கட்டாவிட்டால் வங்கி லாக்கரில் உள்ள பொருள் அகற்றப்படும் என்று அனுப்பி வைத்தாகவும் தெரிகிறது. ஆனால் இந்த எச்சரிக்கை கடிதமும் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் லாக்கர் பணம் கட்டாததை அடுத்து ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம், தம்பதியினரின் லாக்கரை உடைத்து அதில் உள்ள நகைகள் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் அரிய நாணயங்களை விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.

மிகவும் தாமதமாக இதனை தெரிந்து கொண்ட தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், தங்களுக்கு அனுப்ப வேண்டிய பில்களை தவறான முகவரிக்கு அனுப்பிவிட்டு தற்போது தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்பனை செய்துள்ளனர் என்று வழக்கு தொடர்ந்து உள்னர். ஆனால் வங்கி நிர்வாகம் தம்பதியினர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்