Connect with us

இந்தியா

இந்தியாவில் மட்டும் 45,000 வேலைவாய்ப்புகள்: AI தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!

Published

on

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்புகள் பரிபோகும் ஆபத்து இருப்பதாக ஒரு பக்கம் சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் AI தொழில்நுட்பம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பாக அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டேட்டா விஞ்ஞானிகள் மற்றும் எம்எல் என்று கூறப்படும் இயந்திர கற்றல் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தேவைப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் டேட்டா இன்ஜினியரிங் பணிகளில் ஆண்டுக்கு 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த வேலைகளுக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் எம்எல் இன்ஜினியர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய டேட்டா விஞ்ஞானிகள் தலா 14 லட்சம் வரை சம்பாதிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படும் என்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து முடித்த உடனே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த துறையில் ஒரு சில வருடங்கள் அனுபவம் இருந்தால் ஆண்டுக்கு 25 முதல் 45 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒரு சில வேலை வாய்ப்புகள் பறிபோனாலும் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம்ம் என்பது ஒரு புரட்சியை ஏற்படுத்தி உலக சந்தையையே மாற்றி அமைக்கும் திறன் படைத்தது என்றும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கவும் பல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் எனவே தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த தொழில்நுட்பம் குறித்த மேல் படிப்பை படித்தால் கண்டிப்பாக நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்