சினிமா
விக்னேஷ் சிவனை வேண்டாம் என ரிஜெக்ட் செய்த சிவகார்த்திகேயன்! அதுக்கும் அவர் தான் காரணமா?
சிறுத்தை சிவாவுடன் இணைந்த நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்தார். அதில், வீரம் மற்றும் விஸ்வாசம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தன.
அடுத்ததாக அ. வினோத் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்களில் தொடர்ந்து நடித்தார் இந்த மூன்று படங்களி கடைசியாக வந்த துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக மாறியது.
இந்நிலையில், அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என எதிர்பார்த்த பலருக்கும் பலத்த ஏமாற்றமாக அந்த படத்தில் இருந்தே விக்னேஷ் சிவனை அஜித் நீக்கி விட்டார்.
இயக்குநர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் லைகா நிறுவனமோ அல்லது மகிழ் திருமேனி தரப்போ உறுதிபடுத்தவில்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை.
மறுபக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்திற்கான நடிகரை தேடும் வேட்டையில் தீவிரம் காட்டி வருகிறார். மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து படம் பண்ணுங்க என ரசிகர்களே சொல்லி வந்தாலும், பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு செம ஜாலியான படத்தைக் கொடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார்.
ஆனால், பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோ என தயாரிப்பாளர்களிடம் சென்று விக்னேஷ் சிவன் சொல்லி வரும் நிலையில், அட்லீஸ்ட் சிவகார்த்திகேயனையாவது வைத்து படம் பண்ணலாமே என பணம் போடுவர்கள் மார்க்கெட் ரீதியாக சற்று யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயனை அணுகியும் விக்னேஷ் சிவன் கதை சொல்லி விட்டாராம். ஆனால், இப்போதைக்கு தான் ரொம்பவே பிசியாக இருப்பதாக சொல்லி விக்னேஷ் சிவன் கோரிக்கையை சிவகார்த்திகேயன் நிராகரித்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைவசம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் பேனரில் உள்ள படம் தான் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் படத்தை வேண்டாம் என சொல்ல காரணம் என சொல்லப்பட்டாலும், அஜித் மீதுள்ள அளப்பரிய பாசம் தான் இப்படி பிரச்சனை விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே இந்த கெளஷிக் வந்தால் சரியாக இருக்காது என்கிற உஷாரான யோசனையுடன் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவனை நைசாக கழட்டி விட்டுள்ளார் என்கின்றனர்.