உலகம்
சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா: போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி எழுதிய கடிதம்!
போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவால் உக்ரைன் நாட்டில் ஏராளமான அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் .
இந்த நிலையில் சமீபத்தில் போரில் உயிரிழந்த தாய் ஒருவருக்கு 9 வயது சிறுமி எழுதிய கடிதத்தை உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ’அம்மா இது உங்களுக்கு மார்ச் 8ஆம் நாளுக்கான பரிசு என்ற சிறுமி எனது வாழ்க்கையின் சிறந்த ஒன்பது வருடங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார் .
மேலும் இந்த உலகிலேயே நீங்கள் தான் சிறந்த தாய் என்றும் உங்களை என்றும் மறக்க மாட்டேன் என்றும் நீங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .
நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் என்றும் எழுதியுள்ள சிறுமி சொர்க்கத்திற்கு சென்று சேரும் அளவிற்கு நல்ல பெண்ணாக நான் இந்த உலகில் வாழ்வேன் என்றும் அவர் தனது தாய்க்கு உறுதி அளித்திருக்கிறார். இந்த உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.