தமிழ்நாடு

அண்ணா பல்கலையின் 9 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குராகொரோனா னா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது என்பதும் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 ஒன்பது மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒமிக்ரான் உள்பட வேறு எந்த அறிகுறியும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version