இந்தியா

3 வயது சிறுமியை மோசம் செய்த 83 வயது பூசாரிக்கு 45 ஆண்டுகள் சிறை!

Published

on

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 வயது சிறுமியை 83 வயதான பூசாரி ஒருவர் பலமுறை பலாத்காரம் செய்த கொடூர அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 83 வயதான பூசாரிக்கு எந்த தயவும் காட்டாமல் 45 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

#image_title

கேரளாவின் கொச்சி உதயம்பேரூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். 83 வயதான முதியவரான இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மூன்றரை வயது சிறுமிக்கு கற்கண்டு, முந்திரி போன்ற சுவையான தின்பண்டங்கள் கொடுத்து தனது வீட்டுக்கு அடிக்கடி அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்துவந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து முதியவர் புருஷோத்தமன் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பூசாரி புருஷோத்தமனுக்கு 45 ஆண்டுகள் சிறையும், 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பேத்தி வயதுள்ள ஒரு குழந்தையை பலாத்காரம் செய்ததை ஏற்று கொள்ள முடியாது. எனவே குற்றவாளி முதியவர் என்ற போதிலும் அவருக்கு எந்த தயவும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version