தமிழ்நாடு

சென்னையில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று தமிழகத்தில் பாதிப்பு குறைந்தபோதிலும், சென்னையில் அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய முழு கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தமிழகத்தில் இன்று 828 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,11,584 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 828 பேர்களில் 127 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,247 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 931 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,65,178 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,01,143 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 522,36,972 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version