இந்தியா

குளிக்கும்போது வீடியோ!. பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 81 வயது தாத்தா…

Published

on

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர பாண்டே(81). இவர் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் நண்பர்கள்

நாராயண் பாண்டேவுக்கு ரத்திபாத் எனும் கிராமத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாராயண் பாண்டேவும், தேவேந்திர பாண்டேவும் பண்ணை வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு பணிபுரியும் 38 வயது பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு பின்னணியில் ஒரு கதையும் உள்ளது. அப்பெண் குளிக்கும் போது நாராயண் பாண்டே செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் அதை காட்டி மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தற்போது தனது நண்பர் தேவேந்திர பாண்டிக்கும் அவரை விருந்தாக்கியுள்ளார்.

எனவே, இதற்கு மேல் இதை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடாது என கருதிய அப்பெண் தனது கணவரிடம் இதுபற்றி தெரிவித்தார். எனவே, இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் தேவேந்திர பாண்டி ஒரு எழுத்தாளரும் கூட. சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version