தமிழ்நாடு

22 வயது இளம்பெண் நாட்கணக்கில் பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ் 2 மாணவர்கள்!

Published

on

விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 8 பேர் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண் அங்கு உள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை மேலத்தேர்வை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி அவருடன் பழகி இருக்கிறார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரிஹரன் அந்த பெண்ணை மெடிக்கல் குடோன் ஒன்றுக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதை செல்போன் மூலம் படம் எடுத்து அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் அந்த வீடியோவை பார்த்து பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் டிரைவர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அந்த டிரைவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து காவல்துறையில் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் 4 பேர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் அரசியல் கட்சி நிர்வாகிகள் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version