இந்தியா

4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளியை பிடிக்க 700 போலீஸார்

Published

on

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை 20 மணி நேரத்தில் 700 போலீசாரின் உதவியுடன் பிடித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை அழைத்துக் கொண்டு தனிமையான இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த சிறுமியை கொலை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். மேலும் குற்றவாளி கைது செய்யப்படும் வரையில் சிறுமியின் பிணத்தை வாங்க மாட்டோம் என்று பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி 700 போலீசார் குற்றவாளியை பிடிக்க களமிறக்கப்பட்டனர். வாட்ஸ்அப் குரூப் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் விசாரணை செய்து குற்றவாளியை சரியாக 20 மணி நேரத்தில் பிடித்தனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை 20 மணி நேரத்தில் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version