சினிமா

7 நாளில் 500 கோடி; உலகமெங்கும் பறக்குது சூப்பர்ஸ்டார் கொடி!

Published

on

ரஜினியின் 2.0 திரைப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் 3டியில் 2.0 திரைப்படம் கடந்த வியாழனன்று வெளியானது. முதல் வார இறுதியில் 400 கோடி ரூபாயை வசூலித்த 2.0 தற்போது 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக லைகா அறிவித்துள்ளது.

ஒரு நேரடி தமிழ் படம் 500 கோடி கிளப்பில் இணைவது இதுவே முதல் முறையாகும். மேலும், வார இறுதி நாட்களில் இன்னும் அதிக வசூலை படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டு மே மாதம் சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் 2.0 ரிலீஸ் ஆகவுள்ளதால் பாகுபலி படத்தின் மொத்த வசூலான 1500 கோடியை 2.0 எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version