தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரசும் தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 685 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 857,602 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Us corona death toll overtakes world war 2மேலும் சென்னையில் இன்று மட்டும் 292 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 12,535 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 543 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 840,723 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 65,764 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 177,68,971 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version