தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இத்தனை பேரா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 500 க்கும் குறைவாகவே தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 600ஐ தாண்டி 700ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விபரம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 670

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 858,272

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 265

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 4

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,539

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 527

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 841,250

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 64,933

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 178,33,904

Trending

Exit mobile version