இந்தியா

மாமனாரை திருமணம் செய்த மணமகள்: மணமகன் தப்பியோட்டம்!

Published

on

பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் மண்டபத்துக்கு வந்த பின்னர் திருமணத்தன்று காலையில் மணமகன் தனது காதலியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனை அறிந்த மணமகன் வீட்டார் திருமணத்தை உடனே ரத்து செய்ய முயற்சித்தனர். ஆனால் ஏற்பாடு செய்த திருமணம் நின்று விட்டால் தனது மகளின் வாழ்க்கை என்னவாகும் என எண்ணிய மணமகளின் பெற்றோர், மணமகனின் தந்தையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் அந்த பெண்ணும் தனது மாமனாருக்கு கழுத்தை நீட்டியுள்ளார்.

21 வயதான அந்த பெண்ணை 65 வயதான மாமனாருக்கு திருமணம் செய்து வைத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version