இந்தியா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா!

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,19,08,910 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 என்றும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,52,647 என்றும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 5,81,09,773 என்பதும் குறிப்பிடத்தக்கது.,

இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

மகாராஷ்டிரா – 36,902

பஞ்சாப் – 3,122

சட்டீஸ்கர் – 2,665

கர்நாடகா – 2,566

குஜராத் – 2,190

மத்தியபிரதேசம் – 2,091

தமிழ்நாடு – 1,971

கேரளா – 1,825

டெல்லி – 1,534

ஹரியானா – 1,322

உத்தரபிரதேசம் – 1,028

Trending

Exit mobile version