இந்தியா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,19,08,910 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 என்றும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,52,647 என்றும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 5,81,09,773 என்பதும் குறிப்பிடத்தக்கது.,
இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
மகாராஷ்டிரா – 36,902
பஞ்சாப் – 3,122
சட்டீஸ்கர் – 2,665
கர்நாடகா – 2,566
குஜராத் – 2,190
மத்தியபிரதேசம் – 2,091
தமிழ்நாடு – 1,971
கேரளா – 1,825
டெல்லி – 1,534
ஹரியானா – 1,322
உத்தரபிரதேசம் – 1,028