தமிழ்நாடு

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 62 வயது முதியவருக்கு 7 வருட சிறை!

Published

on

திருப்பூரில் 8 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

திருப்பூர் ஜோதி நகரை சேர்ந்த அனீபா என்ற 62 வயது முதியவர் கடந்த வருடம் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து தனது வீட்டில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் முதியவரின் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் முதியவரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டு அவருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version