இந்தியா

காதலர் தினம்.. AI தொழில்நுட்பம் மூலம் அன்பை வெளிப்படுத்தும் காதலர்கள்..!

Published

on

காதலர் தினத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள எஸ்எம்எஸ், மெயில் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஆண்டு AI என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரும்பாலான காதலர்கள் பயன்படுத்த உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது என்பதும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ChatGPT என்ற நிறுவனத்தில் AI தொழில்நுட்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி மனிதர்களின் எதிர்காலம் AI தொழில்நுட்பம் தான் என்று கூறப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் மிகவும் எளிதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வரும் 14ஆம் தேதி கொண்டாட இருக்கும் காதலர் தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள ChatGPT அறிமுகப்படுத்தும் AI தொழில்நுட்பம் மூலம் மெசேஜ்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ChatGPT மூலம் எழுதிய காதல் கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட காதல் கடிதத்திற்கும் இடையே வித்தியாசத்தை பெரிய அளவில் காண முடியவில்லை என்றும் பெரும்பாலான இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் தற்போது AI தொழில்நுட்பம் ஊடுருவ தொடங்கிவிட்டது என்றும் 78% பேர் AI தொழில்நுட்ப கருவியான ChatGPT மூலம் எழுதப்பட்ட காதல் கடிதங்களை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் கருத்துக்கணிப்பு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 9 நாடுகளில் சுமார் 5000 பேர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர்களில் 78% பேர் AI மற்றும் இணையம் மூலம் அன்பையும் உறவையும் பரிமாறிக் கொள்கின்றனர் என்பது கண்டறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைமையில் அதிகாரி கூறுகையில் செயற்கை நுண்ணறிவு தற்போது பிரபலமடைந்து வருகிறது என்றும் குறிப்பாக இணையத்தில் உள்ளவர்கள் ChatGPT போன்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இது அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமின்றி சமூக விரோதிகள் பயன்படுத்தும் கருவியாகும் மாறும் அபாயம் இருப்பதாகவும் எனவே தனி உரிமை மற்றும் அடையாளத்தை பாதுகாத்து இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசடி செய்பவர்கள் மூலம் பெறும் இழப்பு ஏற்படலாம் என்றும் அவரை எச்சரீகை விடுத்துள்ளார்.

உறவுகள் மற்றும் காதலை வெளிப்படுத்த இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் ஆனால் பணம் மற்றும் தனிப்பட்ட தகவலை அனுப்பும்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வருங்காலம் என்பது AI தொழில்நுட்பம் தான் என்றும் அனைத்து துறைகளிலும் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version