தமிழ்நாடு

வாரந்தோறும் ஷார்ஜாவுக்கு கோவையில் இருந்து 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி!

Published

on

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான விமான சேவை அல்லாத ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் ‘பாண்டட் டிரக்’ சேவையின் மூலமாக சாலை வழியாக கொச்சி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழ சீசன்

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஒரு வாரம் ஒருமுறை 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், எப்போதும் வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், பழங்கள், வார்ப்படம், காய்கறிகள் மற்றும் சிப்ஸ் உள்பட பல உணவு வகைகள் முன்பதிவு செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

கோடை காலத்தில் எப்போதும் மாம்பழம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து, மாம்பழங்கள் அதிகளவில் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது. வாரம் ஒருமுறை 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகளை கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால், சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக உயரும் என கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

seithichurul

Trending

Exit mobile version