தமிழ்நாடு

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அன்பில் மகேஷ்

Published

on

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் முழு ஆண்டு பொதுத் தேர்வு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமிபத்தில் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version