தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் 236!

Published

on

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 569 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 856,249 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

new coronavirus strainமேலும் சென்னையில் இன்று மட்டும் 236 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 12,525 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 510 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 839,648 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 54,964 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 176.38.302 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version