தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அவ்வப்போது திடீர் திடீரென காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பதையும் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 55 காவல் துணை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பி மற்றும் ஏஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இடமாற்றம் குறித்து அனைத்து உத்தரவுகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version