தமிழ்நாடு
தேர்தல் நேரத்தில் திடீரென மாற்றப்பட்ட 54 ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழகத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளி வந்து விட்டால் கட்டுப்பாடுகளும் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் திடீரென ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், நேற்று ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட 54 ஐபிஎஸ் அதிகாரிகளில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த்குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு நியமனம், செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடமாற்றம் செய்யப்பட்ட 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் அவர்கள் பணிபுரியவுள்ள இடங்கள் குறித்த முழு விபரம் இதோ: