தமிழ்நாடு

52 கல்லூரி முதல்வர்கள் ஆஜராக சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published

on

தமிழகத்திலுள்ள 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்து உள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில் தணிக்கை துறை விசாரணை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள 52 கல்லூரி முதல்வர்கள் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version