இந்தியா
ராஜ்குந்த்ரா செயலியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச படங்கள் இத்தனையா? அதிர்ச்சி தகவல்
ஆபாச படங்கள் தயாரித்து அதனை வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்துவரும் காவல்துறையினர் நேற்று மும்பை நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமான இரண்டு செயலிகளில் இருந்து 51 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ராஜ்குந்த்ராவின் பர்சனல் லேப்டாப்பில் இருந்தும், மொபைல் போனில் இருந்தும் ஏராளமான ஆபாச படங்களில் இருப்பதாகவும் அதை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ்குந்த்ரா தனது லேப்டாப் மற்றும் மொபைல் போனில் வைத்திருந்த ஆபாச படங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார் தான் அவரை கைது செய்திருப்பதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்
செயலியில் இருந்து கைப்பற்றப்பட்ட 51 ஆபாச படங்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அவை டெலிட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுவரை ராஜ்குந்த்ரா டெலிட் செய்து உள்ள ஆபாச படங்களையும் மீட்கும் நடவடிக்கையில் போலீசார் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.