உலகம்

சுவிங்கம் சாப்பிட்டால் கொரோனா பரவாது: ஆய்வில் ஆச்சரிய தகவல்!

Published

on

50 மில்லிகிராம் சுவிங்கம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என ஆய்வில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தது என்பதும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய வகை உருமாறிய வைரஸ் மனித குலத்தையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவினால் மீண்டும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பென்சில்வேனியா நாட்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுவிங்கம் மூலம் கொரோனா நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம் என ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தாவரத்தில் இருந்து பெறப்பட்ட புரதச் சத்துக்களைக் கொண்ட சுவிங்கம் ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். புரதச் சத்துக்கள் கொண்ட சுவிங்கத்தை சுவைப்பதன் மூலம் பரவும் திறன் கொண்ட வைரஸ்களை சுவிங்கம் இழுத்து வைத்துக்கொள்ளும் என்றும் இதனால் வாய் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரனோ வைரஸ் பரவாது என்றும் சோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்த சுவிங்கத்தை சுவைக்க செய்து ஆய்வு செய்ததில் அவருடைய வாய் மற்றும் பல் ஈறுகளில் உள்ள வைரஸ்களை இந்த சுவிங்கம் இழுத்து வைத்துக் கொண்டதை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சாதாரண சுவிங்கம் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 50 கிராம் கொண்ட இந்த சுவிங்கத்தை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் 95% கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சுவிங்கம் விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வரும் என்று என்றும் அவ்வாறு இந்த சுவிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி கிடைக்காத நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் பென்சில்வேனியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version