இந்தியா

உபியில் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி: 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு

Published

on

ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பதாகவும் அங்கு பாஜக ஒற்றை இலக்க தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு என்றும் ஆம் ஆத்மி கட்சியை இங்கு ஆட்சியைப் பிடிக்கும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கோவா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது .

மணிப்பூர் மாநிலத்திலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version