இந்தியா
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் படிப்படியாக நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக வந்த தேர்தல் முன்னிலை அறிவிப்பில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சற்று முன் வெளியான தகவலின்படி உத்தரப்பிரதேச 15 பாஜக இடங்களிலும் சமாஜ்வாதி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாபில் பாஜக 4 இடங்களிலும் உத்தரகாண்டில் பாஜக இரண்டு இடங்களிலும் கோவாவில் பாஜக மூன்று இடங்களிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது