தமிழ்நாடு

5 பைசாவுக்கு பிரியாணி வாங்க குவிந்த மதுரை சிட்டிசன்ஸ் – அரண்டுபோன கடை நிர்வாகம்!

Published

on

மதுரையில் உள்ள சுகன்யா பிரியாணி கடையில் ஒரு விசித்திரமான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, ‘யாரெல்லாம் பழைய செல்லாத 5 பைசா நாணயத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக தங்கள் கடையில் இருந்து பிரியாணிப் பொட்டலம் வழங்கப்படும்என்று பகீர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். 

இது குறித்து அறிந்த மதுரையன்ஸ், தங்கள்பொக்கிஷ அறையிலிருந்தபழைய 5 பைசாவுடன் கடையை முற்றுகையிட்டு உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு டாட்டா காட்டிவிட்டு சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஓசி பிரியாணி வாங்க குவிந்து உள்ளனர். 

தங்கள் அறிவிப்பின் வீரியத்தை அறியாத சுகன்யா பிரியாணி கடை உரிமையாளர்கள், அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்கள். அத்துடன் கடையின் ஷட்டரையும் இழுத்து மூடிவிட்டு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். 

அங்கு வந்து, சம்பவத்தைக் கேட்ட காவல் துறையினர் மக்களைக் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினர். ஆயினும் தங்களுக்கு உறுதி அளித்தது போல பிரியாணி கிடைக்கவில்லை என்று மதுரையன்ஸ் பலர் குமுறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. 

seithichurul

Trending

Exit mobile version