சினிமா செய்திகள்

வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் – அமிதாப் அசத்தல்

Published

on

காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கர தற்கொலைப் படை தாக்குதலில் தமிழக்த்தை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் கண்டனங்களையும் உயிரிழந்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், வீரமரணம் அடைந்த 44 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அந்த அந்த மாநில அரசுகள் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் அரசு வேலைகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version