செய்திகள்

எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கொரோனா – சென்னையில் அதிர்ச்சி…

Published

on

கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர்.

சமீபகாலமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 2731 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு மட்டும் நேற்று ஒரு நாளில் 1489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிலையத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு சில மாணவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்ததை அடுத்து 1417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பல மாணவர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியிருப்பதால பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, Madras Institute of Technology ஒரு வார காலம் மூடப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version