இந்தியா

25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபர் த ற் கொ லை: காரணம் ஒரு நாய்?

Published

on

25 வயது வயது இளம் பெண்ணை மணந்த 45 வயது நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைக்கு ஒரு நாய் தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கரப்பா என்ற 45 வயது நபர் மோகனா என்ற 25 வயது இளம் பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் தனது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினார் என்பதும் அதன் மூலம் அவர் சமூக வலைத்தளத்தில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது தோட்டத்தில் தூக்கில் தொங்கி சங்கரப்பா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது அவரது மனைவி மோகனாவுக்கும் அவரது தாயாருக்கும் கடந்த சில நாட்களாக சண்டை நடந்து வந்ததாகவும், இந்த சண்டை காரணமாக மன உளைச்சலில் இருந்த சங்கரப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினரிடம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்தபோது மாமியார் மருமகள் இருவருக்கும் இடையே நாய் வளர்ப்பதில் அடிக்கடி சண்டை வரும் என்றும் சங்கரப்பா இந்த விஷயத்தில் தனது தாய்க்கு ஆதரவாக பேசியதாகவும், இதனால் மோகனா அவரிடம் கடுமையாக சண்டை போட்டதாகவும் இதன் காரணமாகவே சங்கரப்பா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

25 வயது இளம் பெண்ணை மணந்த சங்கரப்பாவின் தற்கொலைக்கு ஒரு நாய் காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மோகனா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version