தமிழ்நாடு

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காம கொடூரன்!

Published

on

திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய் இரவில் வேலைக்கு செல்வதால், தந்தையின் பாதுகாப்பில் இரவில் அந்த குழந்தைகள் இருந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு தூக்கிச்சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து அந்த 4 வயது சிறுமி அழுதுகொண்டே தனது தந்தையிடம் நடந்ததை விவரித்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இதனை தெரிவித்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரையும் விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version