தமிழ்நாடு

4 சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பா: சென்னையில் பங்கரம்!

Published

on

சென்னை திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமியை பெரியப்பா உறவுமுறை கொண்ட ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் அந்தோணிநகரில் ராஜூ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவரது மனைவி தனது மகனை டியூஷனுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் 4 வயது சிறுமியை தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ள மீனாட்சி சுந்தரம் என்பவர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். சிறுமிக்கு அவர் பெரியப்பா உறவுமுறை ஆகும். இந்நிலையில் வீடு திரும்பிய ராஜூவின் மனைவி மகளை காணாததால் பதற்றமடைந்து பல இடங்களில் தேடியுள்ளார். இறுதியில் கழிவறை பினாயில் ஊற்றிக் கழுவப்பட்டு அங்குள்ள வாளியொன்றில் சாக்கு மூட்டையில், அச்சிறுமியின் சடலம் இருந்ததைக் கண்டு ராஜூவும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலீசார் வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் என்பவரது வீட்டில் இருந்து ராஜூவின் வீட்டுக்குச் செல்ல வழி இருந்தது தெரிய வந்தது. முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரத்தின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது, படுக்கையறையில் சிறுமியின் கம்மலும் உடைந்த வளையலும் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் அந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

seithichurul

Trending

Exit mobile version