செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா…

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

தமிழகத்தில் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1728 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு மட்டும் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டிணம் பகுதியிலிருந்து அந்த கோவிலுக்கு வந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version