கிரிக்கெட்
மீண்டும் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு: தொடரை வெல்வது யார்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 330 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்ல தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.