இந்தியா

24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் பாதிப்பு… இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா….

Published

on

கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.

எனவே, இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிய் செய்யப்பட்டுள்ளது. மேலும், 439 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, ஒரே நாளில் 2,43,495 பேர் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version