இந்தியா
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?
![money 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/money-1200.jpg)
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது
இதனை அடுத்து விரைவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சரவையில் 3% அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்து உள்ளது
இதனை அடுத்து 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை தற்போது அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.