தமிழ்நாடு

ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி திரை பிரபலங்கள் ட்வீட்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.

கடந்த 28 வருடங்களாக சிறையில் உள்ள அவர்கள் தங்கள் இளமை காலம் முழுவதையும் சிறையில் கழித்துவிட்டனர். இனிவரும் காலத்தையாவது தங்கள் குடும்பத்துடன் கழிக்கட்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் திரை பிரபலங்கள் #28YearsEnoughGovernor என்று டுவிட்டரில் குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர். இது தற்போது டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டில் இது தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, மனித உரிமை சமந்தப்பட்டது. தயவு செய்து கருணை கொள்ளுங்கள் மரியாதைக்குரிய ஆளுநரே. தற்போதே செயல்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், அன்புக்குரிய கவர்னரே, சிறை தண்டனை மட்டுமே தீர்வு அல்ல.. நியாயத்தின் படி செயல்படுங்கள்.. என்றும். இயக்குனர் ராம், திறக்கட்டும் கதவுகள். கவர்னரைச் சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இது தொடர்பாக பதிவிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version