தமிழ்நாடு

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published

on

கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த 27 மாவட்டங்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி சென்னை, திருவள்ளூர். பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version