இந்தியா

மாயமாகிய கணவர்: 65 வயது முதியவரை திருமணம் செய்த 25 வயது பெண்!

Published

on

கர்நாடக மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவரின் கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து அந்த பெண் 65 வயது முதியவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகனா என்ற 25 வயது பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் வாழ்க்கை ஒரே ஆண்டில் கசந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளாக மேகனாவுகும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மனைவி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மேகனாவின் கணவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதை எடுத்து தனியாக வாழ்ந்து வந்த மேகனா வேறொரு திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான சங்கரண்ணா என்பவர் மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இருவரும் அதன் பின்னர் காதலிப்பதை ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனர்.

இதனை அடுத்து சங்கரண்ணா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் சம்மதம் பெற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 25 வயது மேகனா 65வது வயது சங்கரண்ணாவை திருமணம் செய்து கொண்டதாக தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். முப்பது வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் இருக்கும்போது 65 வயது முதியவருக்கு 25 வயது பெண் கிடைத்துள்ளதை அடுத்து பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வயதை மீறிய காதல் என்றாலும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version