தமிழ்நாடு

முத்தூட் ஃபைனான்ஸில் துப்பாக்கி முனையில் கொள்ளை! 25 கிலோ தங்கம் ஸ்வாஹா!!

Published

on

ஓசூரில் முத்தூட் ஃபைான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் தங்கள் பணியைத் தொடங்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது 9.30 மணியளவில் திடீரென அலுவலகத்தில் முகமூடி கொள்ளையர்கள் கையில் துப்பாக்கிகளுடன் வந்தனர்.

நொடிப்பொழுதில் அலுவலக மேலாளர், பணியாளர்களை தாக்கி அனைவரையும் கட்டி வைத்தனர். உயிருக்கு பயந்து எவரும் வாய் திறக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து 25 கிலோ தங்க நகைகள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாவற்றையும் எடுத்தனர். மேலும், அந்த நேரத்தில் பணம் எடுக்க, போட வந்தவர்களையும் கட்டி வைத்து, அவர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடமும், மேலாளரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். எல்லோரும் மும்முரமாக, பட்டப்பகல் நேரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version