தமிழ்நாடு

மீண்டும் 22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

Published

on

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுடைய இரண்டு விசைப் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவக்ரளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை ஆகி வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிதாக 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும் ஏற்கனவே கைதான மீனவர்களை மீட்கவும் முதல்வர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதிய நிலையில் இன்று மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version