கிரிக்கெட்

2022 ஐபிஎல் போட்டிகள் எப்போது? முதல் போட்டி சென்னையிலா?

Published

on

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 14 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் பதினைந்தாவது ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் தோனி அவர்கள் அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்றும் அவரது கடைசி போட்டி சென்னையில் நடைபெறும் போட்டியாக இருக்கும் என்றும் ஏற்கனவே கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி இன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி தொடங்க இருப்பதாகவும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இருப்பதால் அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என்பதும் இந்த ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் இரண்டு அல்லது மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் சென்னை அணியை பொறுத்தவரை தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version