தமிழ்நாடு

நம்பிக்கையுடன் பிறக்கும் 2022.. முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

Published

on

நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும் என முதல்வர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும். பேரிடரைக் கடந்து மக்கள் யாவரும் நலன் பெற்றிடும் ஆண்டாக 2022 அமைய விரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு நமது அரசின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளில் செழித்திடவும், உலக மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன்.

மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என முதல்வர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version