இந்தியா
2021-ம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு வெளியீடு.. எஸ்.பி.பி, சாலமன் பாப்பையாவுக்கும் விருது!
இந்தியாவின் மிக உயரிய விருது என அழைக்கப்படும் 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு உள்ளிட்ட 7 பேருக்கு பதம் விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலன் பாப்பையா, ஸ்ரீதர் வேம்பு, மறைந்த திருவேங்கடம் வீரராகவன், மறைந்த பி.சுப்ரமணியன், மறைந்த கே,சி,சிவசங்கர், பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், பாப்பம்மாள் உட்பட 102 பேருக்குப் பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.