வணிகம்
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் 200 அமெரிக்க நிறுவனங்கள்!
சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த உடன் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு தங்களை மொத்தமாக மாற்றிக்கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளன.
அமெரிக்க நிறுவனங்களின் இந்த முடிவால் இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு முதல் அதிக வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். மேலும் ஜிடிபி வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.