இந்தியா
20 மாணவிகளை வகுப்பில் பூட்டி வைத்த இரண்டு ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த இடமாற்றத்தை ஏற்காத இரு ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் தங்களுடைய வகுப்பறையில் இருந்த 20 மாணவிகளை பூட்டி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து மற்ற ஆசிரியர்கள் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து மாணவிகளை மீட்டனர். மேலும் மாணவிகளை சட்டத்திற்கு விரோதமாக பூட்டி வைத்த இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவிகளை பூட்டிவைத்த ஆசிரியர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.