சினிமா செய்திகள்
2.0 டிக்கெட் புக்கிங் டல்: அப்செட்டான லைகா!
2.0 திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் ஓபனிங்கே செய்யப்பட்டது. ஆனால், நாளைய காட்சிகளுக்கே பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை என்ற தகவலை அறிந்த லைகா நிறுவனம் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது போல, 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதில் பாதியை ஆவது வசூலிக்குமா? இல்லையா? என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு லைகா தள்ளப்பட்டுள்ளது.
சிஜி கம்பெனிகளால் தான் ஓவர் பட்ஜெட் ஆனது என மேடைக்கு மேடை ஷங்கர் தப்பித்துக் கொள்ளவே பார்க்கிறார். கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றால், தவறுக்கும் அவர் தானே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சர்கார் படம் சரியாக ஓடாததால், விநியோகஸ்தரர்கள் 2.0விற்கு மிகப்பெரிய செக் வித்துள்ளனர்.
படம் நன்றாக ஓடினால் மட்டுமே எல்லா பிரச்சனைகளிலும் இருந்து மீள முடியும். முதல் நாள் வசூல் 100 கோடியை தாண்டினாலும், அடுத்த 4 நாட்களுக்கு அதே வசூல் வந்தாலும் திங்களன்று தியேட்டர்கள் காலியாகி விடும். 400 கோடியை வசூலித்தாலும், படம் சேட்டிலைட் உரிமம், ஹிந்தி உரிமம் போன்றவற்றை வைத்தாவது கரை சேர்ந்து விடும். ஆனால், முதல் நாளே ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை. அடுத்தடுத்த நாள் காட்சிகள் இன்னும் பச்சை நிறத்திலே உள்ளதால், 2.0 வசூல் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.